Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ரூ10.00 லட்சத்திற்கான விபத்து காப்பீடு ஆண்டிற்கு வெறும் Rs.399/Rs.396 ரூபாயில்

நீலகிரி மாவட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தனலட்சுமி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் (IPPB), டாடாஏஐஜிஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் Rs.399-ல்/Rs.396-ல், ரூ.10.00 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாமானிய மக்களுக்கும் விபத்து காப்பீட்டு திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள அஞ்சலங்கள் (தபால்காரர்/கிராமஅஞ்சல் ஊழியர்கள்) மூலம், மிககுறைந்த பிரீமியம் தொகையுடன் கூடிய இந்த விபத்து காப்பீட்டுதிட்டம் செயல்படுத்தப்படுகிறது. 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.

விண்ணப்பபடிவம், அடையாள/முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்த விதமான காகித பயன்பாடுமின்றி, தபால்காரர் கொண்டுவரும் ஸ்மார்ட்போன்/விரல்ரேகைமூலம், வெறும் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலி சிவழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments