என்ன என்ன தகுதிகள் பற்றிய ஒரு முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1) ஏதேனும் ஒரு தொழிற் பிரிவில ஐ.டி.ஐ.-ல் பயின்று தேர்ச்சிபெற்ற முன்னாள் பயிற்சியாளர் Allied தொழிற் பிரிவில் ஒருவருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2) திறன் மிகு பயிற்சி தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற (CEO NTC)பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற செக்டாருடன் தொடர்புடையதொழிற்பிரிவில் ஒருவருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3) ஆகஸ்டு 2018 வரை சேர்க்கை செய்யப்பட்ட மாநில தொழிற் பயிற்சி குழுமம் (SCVT) தொழிற்பிரிவில் பயின்று தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
4) தொழிற் பழகுநர் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் தொழிற்சாலை சட்டம் 1948-ன் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் அரசு, உள்ளாட்சி மன்றத்தில் பதிவு பெற்ற நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிக்கும் தொழிற்பிரிவு தொடர்பான பணியில் மூன்று வருடம் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5) ஆகஸ்டு 2019 ஆம் ஆண்டில் SCVT திட்டத்தின் கீழ் சேர்க்கை செய்யபப்பட்டு தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் தனித் தேர்வராக விண்ணப்பித்து முதன்மை தேர்வு இன்றி நேரடியாக அகில இந்திய தொழிற்தேர்வுக்கு அனுமதிக்கப்டுவர்.
6) விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 18.09.2023 அன்று 21 வயது பூர்த்திசெய்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.
7) இதில் தேர்ச்சி பெறுபவர்கள் ஜுலை 2024-ல் நடைபெறவுள்ள இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வராக கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார். இத் தொழிற்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு தேசிய தொழிற்சான்று (NCVT) வழங்கப்படும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்