Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TEACHER - அரசு உதவி பெறும் பள்ளியில் நிரந்தர ஆசிரியர் வேலை- 2 பள்ளிகளில் காலியாக உள்ள காலி பணியிடங்கள்-CLICK HERE

TRB - ஆசிரியர் நியமனம் - வெளியான புதிய அறிவிப்பு-CLICK HERE

Ration card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு-CLICK HERE

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்கள் Download செய்ய மீண்டும் வாய்ப்பு -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

TRB -Syllabus for Direct Recruitment of Secondary Grade Teachers and B.T. Assistants -CLICK HERE

TET COMPETITIVE EXAM SYLLABUS - ALL SUBJECTS -ஆசிரியர் தகுதி தேர்வு- நியமன தேர்வு பாடத்திட்டம்-CLICK HERE 

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய செய்தி- 5 மதிப்பெண்கள் வழங்க உத்தரவு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய செய்தி அதன் முழு விவரங்கள் பின்வருமாறு:



பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் ஆரம்பமாகிறது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் English கேள்வித்தாளில் கேள்வி எண்கள் 4, 5, 6-ல் நேர்ச்சொல், எதிர்ச்சொல் ஆகியவை கேட்கப்பட வேண்டியதில், நேர்ச்சொல் மட்டும் கேட்டிருந்ததாகவும், ஏற்கனவே நடந்த வகுப்பு தேர்வுகளில் இது போன்று வினாக்கள் கேட்காததால் மாணவ-மாணவிகள் குழப்பம்  அடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் கல்வியாளர்கள், பெற்றோர் தரப்பில் புகார்கள் எழுந்தன. 

மேலும் question paper-ல்  28-வது எண் வினாவும் தவறாக கேட்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த வினாக்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண் டும் என்று ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள், மாணவ- மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

இந்த கோரிக்கையை ஏற்று அரசு தேர்வுதுறை மதிப்பெண் வழங்கி மாணவ-மாணவிகளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருக்கிறது.

 அதன்படி, பத்தாம் வகுப்பு பொது தேர்வு English exam 4, 5, 6 ஆகிய கேள்விகளுக்கு மாணவர்கள் விடை எழுத முயற்சித்து இருந்தால் தலா ஒரு மதிப்பெண் வீதம் 3 மதிப்பெண்களும் அதே போல் தவறாக கேட்கப்பட்டதாக கூறப்பட்ட 28-வது வினா வுக்கும் விடையளிக்க முயற்சி செய்திருந்தால் 2 மதிப்பெண்களும் என மொத்தம் 5 மதிப்பெண்கள் வழங்க தேர்வுதுறை முடிவு செய்துள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் விடைகுறிப்புகளிலும் இதை தெளிவாக குறிப்பிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Post a Comment

0 Comments